முன்னொரு காலத்தில் மலை ஒன்று இருந்தது. அதன் அடிவாரத்தில் தடாகம் ஒன்றும் இருந்தது. அப்பகுதி மலையும் மலை சார்ந்த இடமாக வும் வனமும் வனம் சார்ந்த இடமாகவும் இருந்தது. அப்பொழுது மலையிலும் மலையைச் சுற்றிய வனப்பகுதியிலும் மிருகங்கள் மட்டுமே இருந்தன. மனித நடமாட்டம் கிடையாது.
ஏகாந்தமும் இயற்கை எழிலும் கொண்ட மலை ஒரு சித்தரை ஈர்த்தது. அவர் பெயர் போகர். அவர் மலை மீது நிரந்தரமாகத் தங்கினார். அரிய வகை மூலிகைகளை கண்டறிந்து அவற்றை நோய் தீர்க்கும் மருந்துகளாக மாற்றினார். அவர் அதிசய மனிதர் என போற்றப் பட்டார்.
சித்தரை தரிசிக்கும் நோக்கில் மனிதர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து மலை மீது ஏறத் தொடங்கினர். சித்தர் அவரது ஆய்வின் உச்சமாக நவபாசனத்தை உருவாக்கினார்.
போகரின் பொதினி
நவபாசாணம் காலம் கடந்து மனித சமுதாயத்தை சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஒரு மனித உருவச் சிலையை கையில் தண்டத்துடன் நிலை நிறுத்தினார். சித்தரின் மூலிகைச் சிலை நோய் தீர்க்கும் மருந்தாக மனிதர்களால் கருதப்பட்டது. அதனால் மலைக்கு செல்லும் மனிதர்களின் எண்ணிக்கை கூடுதல் ஆனது.
அப்பொழுது மனிதர்களுக்கு இடையே மதம் இல்லை, சாதி இல்லை. அவர்களை இணைக்கக் கூடிய சக்தியாக மொழி இருந்தது. ஆகவே தங்களது உயிர் காக்கும் சக்தியான நவபாசாண சிலையை தமிழ் கடவுள் என்று அழைத்த னர். அவர், அனைவருக்கும் நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்கக்கூடிய முருகன் ஆனார். ஆறு, மலை முகடுகளைக் கொண்ட அப்பகுதி பொதினி என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு பொதினி என்ற சொல் மருவி பழனி ஆனது.
இதுதான் பழனி மலையின் யதார்த்த மான வரலாறு. பிற்காலத்தில் ஆட்சியாளர் கள் தமது அரியணையைக் காப்பாற்றிக் கொள்ள மனிதர்களை மதமாகவும் சாதி யாகவும் பிரித்து அரசியல் செய்தனர். அதற்கேற்ப புதிய புதிய கதைகளை கட்ட விழ்த்து விட்டனர். ஏதுமறியாத அப்பாவி மனிதர்கள் மதமாகவும் சாதியாகவும் வேறு பட்டு நின்றாலும் அவர்களது உள்மனதில் காலம்காலமாக ஊறிப் போயிருந்த பழக்க வழக்கங்களும் கலாச்சரமும் பண்பாடும் அவர்களை சேர்த்தே வைத்திருந்தன.
பழனி மலையும் அவர்களுக்கு அப்ப டித்தான். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து தங்களது முன்னோர்கள் மனிதர்களாக மட்டும் இருந்த காலத்தில் எப்படி மலைக்கு சென்று வந்தார்களோ அப்படியே இப்பொழுதும் சென்று வருகின்றனர். மலையின் ஏகாந்தமும் இயற்கை எழிலும்அவர்களை ஈர்த்துக் கொண்டே உள்ளன.மனிதனை மனிதனாகப் பார்க்கும் போகரின் சித்தாந்தமும், மூலிகை அறிவியலின் உச்சமாக அவரால் உருவாக்கப்பட்ட தமிழ் கடவுள் முருகனும் பேதமற்று இன்று வரை அப்படியே இந்து சமய அறநிலையத் துறையால் பாதுகாத்து பராமரித்து வரப்படுகிறது.
ஏகாந்தமும் இயற்கை எழிலும்
பழனிமலையின் வரலாறு நீண்ட நெடிய காலமாக இந்த மண்ணின் உயர்ந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்துடன் இணைந்து வாழும் பெரும்பாலான பழனி மக்களுக்கு தெரியும். அதனால் தான் மதவாத சக்திகள் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கும் பொழுதெல்லாம் அதை எதிர்த்து நின்று புறந்தள்ளி உள்ளனர்.
அழகும் அமைதியும் நிறைந்த பழனிமலைக்கு இப்பொழுது ஒரு புதிய பிரச்னை வந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தவிர வேறு எவரும் பழனி மலை மீது ஏறக்கூடாதாம்..! எங்கே இருந்து இதை கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை.
பழனி மலை மீது யார் வேண்டுமானாலும் போகலாம். கல்லும் முள்ளும் நிறைந்த காலத்திலும், படி வசதி ஏற்பட்ட காலத்திலும், யானைப்பாதை அமைத்த காலத்திலும், வின்ச் மற்றும் ரோப் கார் அமைக்கப்பட்ட நவீன காலத்திலும் மனிதர்கள் பேதமற்று பழனி மலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
பழனி பாவாவான முருகன்
ஆதிகாலந்தொட்டு அவர்களின் ஊனிலும் உயிரிலும் கலந்த உறவாக பழனிமலை கருதப்படு கிறது. பழனி மலை மீது ஏறி இயற்கையை ரசிக்கவும் பிரபஞ்சத்தை நேசிக்கவும் அவர்களுக்கு சகல உரிமை யும் உண்டு. அதற்கு அவர்கள் இந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பழனிமலையைச் சுற்றி வாழும்தொப்புள் கொடி உறவுகளான இசுலாமிய பெருமக்கள் பழனி முருகனை பழனி பாவா என்றழைக்கின்றனர். தங்களின் துன்பம் போக்கும் மருந்தாக கருதுகின்றனர். இந்துக்கள் நெற்றியில் பூசிக் கொள்ளும் திருநீரை கழுத்தில் பூசிக் கொள்கின்றனர்.
அனைவருக்கும் பொதுவான பழனிமலையை
ஒரு சிறு கூட்டம் இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து கைப்பற்ற முயல்கிறது. சுயநலனுக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என கூப்பாடு போடுகிறது. பழனி மலையின் மகத்துவத்தையும் மனிதர்களுக்கு இடையிலான மதநல்லிணக்கத்தை யும் சிதைக்க திட்டமிட்டுள்ளது. அதன் விளைவாக எதிர்காலத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சனாதன சாதிப்பாகுபாட்டின் கீழ் பெரும் பாலான முருக பக்தர்கள் மலை மீது ஏற முடியாத ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்.
ஆகவே பழனி பகுதி வாழ் மக்களும், பழனி முருக பக்தர்களும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய காலம் இது. பழனிமலையின் தொன்மை யான வரலாற்றையும், தொன்று தொட்டு நமக்கிருக்கும் ஈர்ப்பையும் உரிமையையும் எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது.
நமது பழனி நம் அனைவருக்குமான பழனியாக என்றும் இருக்க, மனித மாண்பையும் ஒற்றுமையையும் பலப்படுத்துவோம். மதத்தின் பெயரால் அரசியல் நடத்தும் புல்லுருவிகளை புறந்தள்ளுவோம்.